தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
today weather report rain for eight district
8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்ச்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்குப் விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் , கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.
தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழைபெய்த விவரம்: புள்ளம்பாடி (திருச்சி) 12 சென்டி மீட்டர் மழையும் , கல்லக்குடி (திருச்சி)), திருத்தணி (இருவள்ளூர்) தலா 11 சென்டி மீட்டர் மழையும், வேப்பந்தட்டை (பெரம்பலூர்), அம்முடி (வேலூர்) தலா 10 சென்டி மீட்டர் மழையும்பதிவாகியுள்ளது.
English Summary
today weather report rain for eight district