குறிப்பிட்ட மாவட்டத்தை மட்டும் குறிவைக்கும் கனமழை.! குடை கொண்டு போங்க.!
today weather report dec 25th
சென்னை வானிலை ஆய்வு மையம் தஞ்சை, திருவாரூர், நாகை, விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.
சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் நிலவுகின்ற வளிமண்டல சுழற்சியின் காரணமாக தென் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புகள் இருக்கின்றது.
தஞ்சை, நாகை, திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றது. மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. இதில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. " என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
today weather report dec 25th