தமிழக வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெயில் இரண்டு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோடை மழையை பல இடங்களில் பெய்யாமல் மக்கள் தண்ணீரை தேடி சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளவை, நாளை முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும்.

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->