அடுத்ததாக குறி வைக்கப்படும் 15 மாவட்டங்கள்.! வெளியான அறிவிப்பு.!
TODAY WEATHER REPORT 10.09.2019
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தென்மேற்கு பருவக்காற்று வெப்பச்சலனம் மற்றும் காரைக்கால் அருகே கீழடுக்கில் ஏற்பட்டிருக்கும் சுழற்சியின் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கின்றது.
விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், பெரம்பலூர், திருவள்ளூர், தஞ்சாவூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TODAY WEATHER REPORT 10.09.2019