தமிழகத்தில் பல பகுதிகளில் கொட்டி தீர்த்த பருவமழை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் இன்று பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.

மேலும், திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மயிலம், கூட்டேரிப்பட்டு, செண்டூர், பாதிராப்புலியூர், சித்தனி, பேரணி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், ராமநத்தம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதை தொடர்ந்து நாகை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம்,புத்தூர், வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->