தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை.! மகிழ்ச்சியில் மக்கள்.!!
today rain in selam
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி ஃபானி புயல் வர இருப்பதாக இரண்டு நாட்கள் முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அது 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியது. பிறகு புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஆனால் அதன் பின்னர் புயல் சென்னையில் கரையைக் கடக்காது என்றும் வட மேற்குப் பகுதியை நோக்கி நகருகிறது என்றுசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று முதல் வெப்பநிலை அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும். ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. சேலம் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.