தமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.! ஜில்லென்று மாறிய தமிழகம்.!! உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் வரும் 26-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியிருப்பது 

இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கே வரும் 26-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது இது வரும் 27 ஆம் தேதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கையை தாண்டி மன்னார் வளைகுடா வழியாக தென்னிந்திய பகுதியில் கடந்த செல்ல வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் தென் தமிழகம் மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை மழைக்கும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில  இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது இன்று (ஏப்ரல் 22), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய சூறைக்காற்றுடன் மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் மேலும்  சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், திருப்பூர்,வேலூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், திருவண்ணாமலை, நாமக்கல், கோவை, கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today rain in kanchipuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->