திடீரென கொட்டி தீர்த்த மழை.! வெப்பம் தணிந்து குளிர்காற்று.!! மகிழ்ச்சியில் மக்கள்.!!!
today rain in bangalore
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், பெங்களூருவில் மாலை 4 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது.
பெங்களூரில் பொம்மனஹள்ளி, பேகூர் ரோடு, சில்க் போர்டு, கோரமங்கலா, மகாதேவபுரா, பெல்லந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மாலை 4 மணிக்கு தொடங்கி மழை தற்போது வரை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம்போல தண்ணீர் தேங்கியது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த மக்கள் சிரமப்பட்டனர்.
சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதனால் மக்கள் வீடுகளுக்கு விரைவில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.