விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை., எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
today heavy rain in chennai
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று விடிய விடிய மழை பெய்தது.
மேலும், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, திருவள்ளூர் முதல் நாகை வரையில் உள்ள வட மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மதுரவாயல், போரூர், விருகம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் ராயப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. காலை வரை தொடரும் மழையால் வேலைக்கு செல்பவர்களும், வியாபாரிகளும் மழையில் நனைந்தவாறே சென்றனர்.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் உள்ள பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
இதைதொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலின் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரத்தை கடந்து தெலங்கானா வரை நீண்டுள்ளதாகவும், இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூரில் இருந்து நாகை வரை உள்ள வடமாவட்ட மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் தற்போது உருவாகி இருப்பதால், கடலில் பலத்த காற்று தற்போது வீசி வருகிறது. இதன்காரணமாக நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
English Summary
today heavy rain in chennai