தமிழகத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை..! மகிழ்ச்சியில் மக்கள்.!!
today hail in tirupattur
தமிழகத்தில் வெயில் இரண்டு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோடை மழையை பல இடங்களில் பெய்யாமல் மக்கள் தண்ணீரை தேடி சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளவை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதகவும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடியே, திடீரென திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.