மக்களே உஷார்.. தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!
tn cm says rainfall
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நான்கு நாட்களுக்கு முன் தொடங்கியது, இதன் காரணமாக சென்னை, தேனி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நிவாரண மையங்களில் மக்களை தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, தகவல் தெரிவிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.