தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை-சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Tamilnadu next 24 hours possible to rain
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து படிப்படியாக மழை குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu next 24 hours possible to rain