இந்த வருட வெயில்., இதமா.? சதமா..?! - வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது.?!
summer weather report
கடந்த ஆண்டை விட கோடைகால வெப்பமானது, இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் இறுதியிலேயே, வெயில் மெல்ல அதிகரிக்கத் துவங்கி இருக்கின்றது. இந்த நிலையில் கோடை காலம் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கொஞ்சம் முன்னரே துவங்கி விடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.
கடந்த ஆண்டு கோடை காலத்தின் பொழுது அனல் காற்றும் மற்றும் வெயில் மக்களை பெரிதும் பாதித்தது. வடமாநிலங்களில் வெப்பக் காற்றால் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை கால வெப்பமானது, அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் பாதியிலேயே துவங்கும் கோடை காலமானது பல மாநிலங்களில் சுட்டெரிக்கும் மற்றும் அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் பலரும் கோடையை சந்திப்பது குறித்து அச்சத்தில் இருக்கின்றனர்.