தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!
sep 19 weather report in tamilnadu
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்துக்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
மன்னார் வளைகுடா பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
sep 19 weather report in tamilnadu