தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை! நேரம் குறித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!
sep 16 weather report
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கலந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.