தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
sep 13 weather report
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கலந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
குறிப்பாக மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, தேவாலா பகுதிகளில் தலா 7 செமீ மழை பதிவாகி உள்ளது.