இந்த மாவட்டங்களில் பின்னி பெடலெடுக்க போகும் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
sep 10 weather report
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் காரைக்கால் அருகே கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.