தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.! மிக மிக கனமழை கொட்டி தீர்க்குமாம்.!
red alert for four district
வடகிழக்கு பருவமழை கடந்த தமிழகத்தில் 16 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த புதன்கிழையில் இருந்து மழை பெய்து வருகிறது. கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.
இதுதொடர்ப்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, அரபிக்கடலில்நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலைபகுதியின் காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு தினங்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும்,கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பும் உள்ளதாக புவியரசன் தெரிவித்தார்.
அந்தமான் கடல் பகுதியில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், வருகிற 21, 22 ஆம் தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு, ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்த வானிலை மையம் இந்த நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
red alert for four district