சுட்டெரிக்கும் வெயிலில் தமிழக மக்களுக்கு குளிர்ச்சியான செய்தியை அறிவித்த வானிலை ஆய்வு மையம்!! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் வெயில் இரண்டு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது கத்திரி வெயில் அடித்து கொளுத்துகிறது. இதனால் காலை 9 மணி முதலே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடுகிறது.

இந்த கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் சனிக்கிழமை வரை தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதேநேரத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கம் தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையைப் பொருத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, வேலூர், திண்டுக்கல், ராசிபுரம், தருமபுரி, உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. 

கோடை மழை பல இடங்களில் பெய்யாமல் மக்கள் தண்ணீரை தேடி சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் அதிக இடங்களில் தண்ணீர் படற்குறை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வானிலை மையத்தின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->