தமிழகத்தில் வெளுத்து வாங்கி வரும் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி!
rain in chennai and many district
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழக்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்து 24 மணி நேரத்திற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில இடங்களில் மழையால் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை, கிண்டி, வடபழனி, மயிலாப்பூர், அடையாறு உள்பட நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இமழையானது திருவள்ளூர் மற்றும் மேலும் சில மாவட்டங்களில் பெய்து வருகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு எனவும் நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
rain in chennai and many district