ஆறுமாதத்திற்கு பிறகு குளிர்ந்த சென்னை.! மழை கண்ட சென்னை மக்கள் ஆனந்த கண்ணீர்.!
rain in chennai
தமிழகத்தில் வெயில் இரண்டு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. மேலும் தண்ணீர் பிரச்சினை பொது மக்களின் தீவிர தலைவலியாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை ஏரிகள் அனைத்தும் வறண்டு கடுமையான வறட்சிக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு சென்னை போரூர், வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மீண்டும் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பெய்த மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்சியுடன் இருகின்றனர்.