தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் வானிலை மையம் தகவல்!
rain for six district
தேனி, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துள்ள நிலையில், இன்று ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மேலும், தேனி மாவட்டத்தில் போடி, கம்பம் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல், மதுரை, விருதுநகர். சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு இன்று லேசான முதல் மிதமான வரையிலான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.