தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்!!
rain for seven district
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு, ஓரிரு இடங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கடலூரில் 3 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாட்டின் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் மழையின் தாக்கம் குறையும் என்றும், தற்போதைய கணிப்புகளின்படி, வட கிழக்குப் பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் நிறைவு பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .