நான்கு மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் வானிலை மையம் தகவல்.!
rain for four district
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது, தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் புதுச்சேரி மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் மழையும், காரைக்காலில் 13 சென்டிமீட்டர் மழையும், மயிலடுதுறையில் 6 சென்டிமீட்டர் மழையும், சீர்காழி 5 சென்டிமீட்டர், கும்பகோணம் இரண்டு சென்டிமீட்டர், மரக்காணம் 1 சென்டிமீட்டர் மழை பதிவுவாங்கியுள்ளது.