9 மாவட்டங்களில் இடியுடன் வெளுத்து வாங்கபோகும் மழை.!
rain for eight district in tamilnadu
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென் தமிழகத்தை ஓட்டி நிலவும் வளிமண்டல சுழற்ச்சி (கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் உயரம் வரை) மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், சேலம், கரூர், தர்மபுரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
நாளை (01.09.2020) உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது. முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்..
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்) மாரண்டஹள்ளி (தர்மபுரி); ராயகோட்டை (இருஷ்ணூரி) தலா 7, பாலக்கோடு (தர்மபுரி), சமயபுரம் (திருச்சி) தலா 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
English Summary
rain for eight district in tamilnadu