குறிப்பிட்ட மாவட்டங்களை குளிர்விக்க வரும் மழை.! சென்னை பற்றி என்ன சொல்கிறது வானிலை.!? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெப்பம் கடுமையாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெப்பத்தினை மக்களால் தாங்க இயலாது தவித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் அடிக்கும் வெயிலை எப்படி தாங்க போகிறோம் என்பது தெரியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

பகல் வேளைகளில் வெயிலானது கடுமையாக அடித்தாலும், இரவு வேளையில் பனிப்பொழிவு பெய்து வருகிறது. மேலும், வானிலை மையம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் மழை பெய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது மக்களுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், மழை பெய்யாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பசலனத்தின் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மிதமாக பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது. மேலும், தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்சமாக வெப்பம் 33 டிகிரி பதிவாகும் என்றும், குறைந்தபட்சமாக 25 டிகிரி வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain for 2 district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->