மே 2 வரை.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்.!
Puviyarasan statement about weather
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மேலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்த, அறிவிப்பில் தமிழகத்தின் கடலோரப் பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மற்றும் கர்நாடகாவில் இருந்து தெற்கு கேரளா வரை நிலவுகின்ற வளிமண்டல சுழர்ச்சியினால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும், மே இரண்டாம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் இடங்களில் மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Puviyarasan statement about weather