உருவானது புதிய புயல்.. மழை பெய்யப்போகும் பகுதிகள்? வானிலை ஆய்வு மையம் தகவல்!!
pawan cyclone in arabian sea
தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் முழுவது பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை செய்தது.
பருவமழை தொடங்கி இதுவரை புயல் ஏதும் உருவாகி தமிழகத்தை நெருக்கவில்லை. இருந்தபோது வெப்ப சலனம் காரணமாக இதுவரை ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் தமிழகத்தில் போதிய அளவுக்கு மழை பெய்யுள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியது. இதற்கு பவன் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. பவன் புயல் மேற்கில் நகர்ந்து ஓமன் கடற்கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
pawan cyclone in arabian sea