தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை புரட்டிப்போடப்போகும் பகுதிகள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
oct 19 weather report
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக்கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக தமிழக கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பள்ளிப்பட்டு அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கோபாம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.