தமிழகத்தில் மழை புரட்டிப்போடப்போகும் பகுதி? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
oct 18 weather report
தமிழகம் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 21, 22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கும் ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.