தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை!! வானிலை மையம் அறிவிப்பு!!
next two days rain in 14 districts
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, வெள்ளைகேட், பொன்னேரிகரை, வாலாஜாபாத் உள்ளிட்டபகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
next two days rain in 14 districts