இரண்டு நாட்களுக்கு 7 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
next two days heavy rain for seven district
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள வானிலை அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.
ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காடு ஏத்தாப்பூர், சேலம் தலா 9 சென்டிமீட்டர் மழையும் தர்மபுரி, திருவண்ணாமலையில் தலா 7 சென்டிமீட்டர் மழையும் பதிவுவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
English Summary
next two days heavy rain for seven district