தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் மழை!  - Seithipunal
Seithipunal


வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தாலும் அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வடதமிழகமான திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர்,  சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, திருச்சி, விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களளுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 12 சென்டி மீட்டர் மழையும், போளூரில் 9 சென்டி மீட்டர்  மழை பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தலா 7 செண்டி மீட்டரும், ஆரணியில் 8 சென்டி மீட்டர், மதுரை மேட்டுப்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வேலூர் மாவட்டம் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next three days rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->