இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை., வானிலை மையம் தகவல்!
next 24 hours rain tamilnadu
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தாலும் அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வடதமிழகமான திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது.
English Summary
next 24 hours rain tamilnadu