தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை- சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Next 24 hours rain in tamilnadu
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, புதுக்கோட்டை, விருதுநகர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Next 24 hours rain in tamilnadu