தமிழகத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..கனமழை பெய்யப்போகும் மாவட்டங்கள்!
next 24 hours rain for eight district in tamilnadu
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்து 24 மணி நேரத்திற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக் கூடும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு. நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடம் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
English Summary
next 24 hours rain for eight district in tamilnadu