தமிழகத்தில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி..15 மாவட்டங்களில் மழை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும்  மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் மழைக்கு பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி  பந்தலூரில் 5 சென்டி மீட்டர் மழையும், கோவை சின்னகல்லில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

வட கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, அந்தமான், தென்கிழக்கு வங்க கடல், தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் இந்த  பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next 24 hours fifteen district rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->