சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!! ஏற்படப்போகும் சோதனை!!
metrological center tells about rain
சென்னை வானிலை ஆய்வு மையம் என்ற தமிழகத்தின் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழக கடலோர மாவட்ட பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்திலுள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது, முதல் மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காடு மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
மேலும், நாமக்கல், திருவள்ளூர், திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரித்து உள்ளதால், அனல் காற்று வீசக்கூடும். சென்னையை பொறுத்த அளவு வானம் மேகம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியசில் இருந்து, குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், திருவள்ளூர், திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரித்து உள்ளதால், அனல் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயிருப்பதாக தெரிகிறது.
English Summary
metrological center tells about rain