இன்று தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் மக்கள்.!!
may 09 weather report
தமிழகத்தில் ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
வெயில் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சூறை காற்றுடன் மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. நேற்று திடீரென விழுப்புரம், மதுரை, கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் வெப்பச்சலனம காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே சமயத்தில் பகல் நேரங்களில் அனல் காற்றின் தாக்கமும் அதிகமாக காணப்படும். மாலை நேரத்தில் ஆங்காங்கே குளிர்ந்த காற்று வீசலாம்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனேயே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.