9 மாவட்டங்களை குறிவைக்கும் மழை.! அடுத்த 24 மணி நேரத்தில் குளிர்விக்க வருகிறது.!
march 4th weather report
கோடை வெயில் கொளுத்த தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் ஏற்பட்ட காரணத்தால் நீலகிரி, திண்டுக்கல், கோவை, மதுரை, தேனி, திருப்பூர், நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் மக்களை கதறவிட ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில் லேசான மழைக்கு வாய்ப்பு என்ற தகவலை தகவல் சற்று நிம்மதியைக் கொடுக்கிறது.