தமிழகத்தை குறி வைத்த மழை.. மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு சென்னை வானிலை ஆய்வு மையம்.!
mar 10 weather report
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கோடை காலத்தில் வெயில் எந்த அளவுக்கு இருக்கும் என மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.