தமிழகத்தின் மழை பெய்யப் போகும் பகுதிகள்? சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவல்.!
mar 07 weather report
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இந்த வெப்பத்தை மக்கள் தாங்க முடியாமல் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இருக்கும் வெயிலை எப்படி தாங்கப் போகிறோம் என்ற கவலையில் மக்கள் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கன்யாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் பிற மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல மாவட்டங்களில் அதிகரித்து வரும் வெப்பம் குறைவு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை லேசான சாரல் மழை பெய்யும். மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.