தமிழகத்தின் இந்த இடங்களில் எல்லாம் நேற்றிரவு கொட்டி தீர்த்த மழை!!
last night rain in those districts
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்றிரவு முதல் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகர் மற்றும் மல்லாங்கிணறு, பாத்திமாநகர் சூலக்கரை, ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
சிதம்பரத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னையில் அசோக்நகர், கிண்டி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல்,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவு முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீரானது பெருக்கெடுத்து ஓடியது.
விருதுநகர் மற்றும் மல்லாங்கிணறு, பாத்திமாநகர் சூலக்கரை, ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளானார்கள்.
சிதம்பரத்தில் அரை மணிநேரம் கனமழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
English Summary
last night rain in those districts