கேரளாவில் தொடர் மழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து திருச்சூர் பாலக்காடு மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தின் முக்கிய இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala four district red alert due to rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->