தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை... சென்னை வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.!
june 11 weather report
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், லட்சத்தீவு ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். இதனால் தரைப்பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்பு இல்லை. கடலில்தான் மழை அதிகம் வாய்ப்புள்ளது.
எனவே மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும். தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.