தமிழகத்தில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்க போகும் கனமழை.. எந்த மாவட்டத்தில் தெரியுமா.!
july 30 weather report in tamilnadu
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசக் கூடும் என்பதால் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
july 30 weather report in tamilnadu