கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!!
july 29 weather report in tamilnadu
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
31.7.2021 : கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்-ஐ ஒட்டியிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இன்று மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
English Summary
july 29 weather report in tamilnadu