இன்று மழை பெய்யப்போகும் பகுதிகள்.! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை.!!
jan 22 weather report
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சில நாட்களாக வறண்ட வானிலை நிலவும். இருப்பினும், அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் அதிகம் உள்ளதால் குமரி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.
தென்தமிழக கடலோரத்தின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (நாளை) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.