தமிழகத்தில் இன்று அதிகாலை சாரல் மழை.. மேலும் மழை வெளுத்து வாங்க போகும் பகுதிகள்?
jan 18 weather report
சென்னையில் சில பகுதிகளில் இன்று அதிகாலையில் லேசான சாரல் மழை பெய்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு பொங்கல் கோலத்தை கலைக்க மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்நிலையில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான சாரல் மழை பெய்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி,ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் பலத்த மழை பெய்துள்ளது.
மேலும், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.