இந்த மாவட்டத்தில் இடி மின்னல் காற்றுடன் கனமழை!! வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்!!
heavy rain perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இத்தனைநாள் இரு சக்கர வாகனங்கள், கார்கள் மழைநீரில் மிதந்தன.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்களம், அவ்வையார் நகர் ஆகிய இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் வெள்ளம் வெளியேற வழியில்லாமல் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
English Summary
heavy rain perambalur district